கன்னியாகுமரி மாவட்ட, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகு தற்போது வெளியிட்ட அறிவிப்பில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 10.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு என 03 பணியிடங்கள் கன்னியாகுமரி மாவட்ட, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree அல்லது CA தேர்ச்சி பெற்ற மற்றும் MS-Office தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.12,000/- ஊதியமாக பெறுவார்கள்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.02.2023) தபால் செய்ய வேண்டும்.