ரயில்வே துறை கீழ் செயல்பட்டு வரும் DFCCIL நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் General Manager, TRS Controller ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager பணிக்கு என 01 பணியிடமும், TRS Controller பணிக்கு என 04 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு அல்லது PSU சார்ந்த ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 வருடங்கள் முதல் 17 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் DFCCIL விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.