ரயில்வே துறை கீழ் செயல்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Chief Vigilance Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) Chief Vigilance Officer பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Chief Vigilance Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், Railways / Metros / RRTS / PSU’s நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Group A Service கீழ்வரும் Senior Administrative Grade (SAG) பதவிகளில் போதிய ஆண்டுகாலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த CMRL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.04.2023 அன்றைய தினத்தின் படி, 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Chief Vigilance Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெரும் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் CMRL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள். நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த CMRL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Chief Vigilance Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 25.04.2023 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.